சர்வதேச பாதுகாப்பிற்கான இராணுவ அச்சுறுத்தல்.

அந்த அரசுக்கு எதிராக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் என்றவகையினிலே சர்வதேச பாதுகாப்பு என்பது நோக்கப்பட்டது. குறிப்பாக இராணுவ நலன்களை மையப்படுத்தியதாகவே ஆரம்ப கால சர்வதேச பாதுகாப்பு என்பது நோக்கப்பட்டது. இதனை மரபு ரீதியான நோக்கு என்பர். அத்தோடு 1991அதாவது பனிப்போர் முடிவு மற்றும் ரஷ்யாவின் வீழ்ச்சி வரை சர்வதேச பாதுகாப்பு என்பது இராணுவம் மற்றும் அரசிற்கான வெளிவாரியான அச்சுறுத்தல்கள் என்பவற்றை சுற்றுச்சுழன்ற போதும் அதற்கு பிற்பட்ட காலத்தில் விரிவடைந்து மரபுசாரா நோக்கு என்ற அடிப்படையில் இனம்இ மதம், மொழி, தனிநபர், குற்றக்குழுக்கள், பயங்கரவாதம், சுகாதார மற்றும் சூழலியல் பிரச்சினை, வறுமை, சனத்தொகை பிரச்சினை, சைபர் தாக்கங்கள் என்பவற்றில் இருந்து ஏற்படக்கூடிய நெருக்கடிகளிலிருந்து விடுபடுதலை நோக்காக கொண்ட ஒன்றாக மாறியது. இதில் நாம் சர்வதேச பாதுகாப்பிற்கான இராணுவ அச்சுறுத்தல் தொடர்பாக விரிவாக பார்ப்போம்.
இராணுவம்: ஒரு நாட்டிற்காக வன்முறையைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். இவ் இராணுவப்படையானது தரைப்படைஇ கடற்படைஇ வான்படை மற்றும் ஈரூடகப்படை என வகைப்படும். இராணுவ அச்சுறுத்தல் அல்லது இராணுவ சவால் எனப்படுவது பொருளாதார மற்றும் இராஜதந்திர மோதல்களை தீர்ப்பதற்காக இராணுவ படையினை பயன்படுத்தி எதிர்கொள்ளும் ஓர் இராணுவ புலனாய்வூ நுட்பமுறையாகும். அந்தவகையில் இதன் மூலம் குறிப்பிட்ட நாட்டின் இராணுவ வலிமையானது இன்னுமொரு நாட்டிற்கோஇ நாடுகளுக்கோஇ குறிப்பிட்ட பிராந்தியத்திற்கோ அல்லது உலகிற்கே நெருக்கடியாக அமையும். 20ஆம் நூற்றாண்டு வரை இராணுவ ரீதியான அச்சுறுத்தல்களுக்கே சர்வதேச நாடுகள் முகங்கொடுத்து வந்தன. அதே போல் நாடுகள் தமது பாதுகாப்பினை இராணுவ பலத்தின் ஊடாகவே உறுதி செய்தும் வந்தன. இதுவோர் சுழற்சி
முறையில் இடம்பெறும் ஒன்றாகும். ஒரு நாடு தனது இராணுவத்தினை பெருப்பித்துக் கொள்ளும்போது இன்னுமொரு நாட்டிற்கு அது அச்சுறுத்தலாக அமைந்து அந்நாடு தனது இராணுவ பலத்தினை விரிவாக்கிக் கொள்ளஇ மீண்டும் முதல் நாடு தனது இராணுவத்தினை மேலும் விரிவாக்கிக்கொள்ளும் இதுவே இச்சுழற்சி முறையாகும்.
Bery
Buzan என்பவர் “PEOPLE, STATE AND FEAR” என்ற தனது நூலில் மிக முக்கியமாக இராணுவம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர் இராணுவப்பாதுகாப்பு என்பது அரசுகளுக்கிடையிலான போட்டா போட்டி மற்றும் அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதற்கான ஆற்றலே எனக்குறிப்பிட்டார். அந்த வகையில் ஒரு நாட்டிற்கு வரக்கூடிய மிகமுக்கிய அச்சுறுத்தல் இராணுவத்தினூடாகவே ஆகும் என எடுத்துக்காட்டுகிறார்.
Hens
Moganthough “POLITICS AMONG NATIONS” என்ற தனது நூலில் அரசுகள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு அதிகார வழிமுறைகளையே நாடுகின்றன எனவூம் தமது அதிகாரத்தினை நிர்ணயிக்கும் காரணிகளுள் ஒன்றாக இராணுவத்தினையூம் கொண்டு இராணுவ வலிமையினை பெருக்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
George
Sorenson, அரசுகளை நவீன, பின்நவீன மற்றும் காலனித்துவத்தின் பின்னரான அரசுகள் என வகைப்படுத்திஇ இதில் நவீன அரசுகள் முகங்கொடுத்த அச்சுறுத்தலாக: ஒரு நாடு இராணுவ பலத்தின் ஊடாக தனது அதிகாரத்தை விஸ்தரித்துக்கொள்ளல் மற்றைய அரசுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது எனக்குறிப்பிட்டார்.
இவ் இராணுவ அச்சுறுத்தலானது MAD(Mutually
Assured Destruction) எனும் கோட்பாட்டின் அடிப்படையினையே கொண்டுள்ளது. அதாவது பரஸ்பர உறுதிபடுத்தப்பட்ட அழிவூ ஆகும்.



இத்தகைய சம்பவங்களானது இன்று என்னதான் புதிய பல தொழில்நுட்ப முறைகள் மற்றும் பொருளாதார ரீதியில் நாடுகள் வலிமை பெற்று வந்திருந்த போதிலும் தமது இராணுவத்தை பலப்படுத்துவதையே தம் நாட்டின் வலிமையாக எண்ணிவருகின்றன. எனவே இராணுவ அச்சுறுத்தல் என்பது தனித்து மரபு சார் ஒன்று எனக்கூறி புரக்கணிக்க இயலாது. ஏனெனில் இன்றும் இராணுவ அச்சுறுத்தல் என்பது சர்வதேச பாதுகாப்பை சவாலுக்கு உட்படுத்தும் ஒன்றாக உள்ளது.
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
No comments:
Post a Comment